Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படப்பிடிப்புக்கு டிமிக்கி: நடிகை மீரா ஜாஸ்மினுக்கு நீதிமன்றம் சம்மன்!
ஸ்வப்னமாலிகா என்ற மலையாளப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தேவராஜன் என்பவரிடம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.
ஆனால் சொன்னபடி அந்தப் படப்பிடிப்புக்கு போகவில்லை அவர். இதனால் கோபமடைந்த அவர் கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதில் மீரா ஜாஸ்மினுக்கு சம்மன் அனுப்பியது கோர்ட்.
இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் மீரா ஜாஸ்மின். தேவராஜன் தன்னிடம் சொன்ன கதை வேறு, இப்போது எடுப்பது வேறு என்றும் எனவே இந்த சம்மனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என்றும் மீரா கேட்டுக் கொண்டார்.
மீராவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது தரப்பு வாதத்தை ஏற்கவில்லை. வரும் 8-ம் தேதிக்குள் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
எனவே வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகிறார்.
இப்போதைய நிலவரப்படி மீரா ஜாஸ்மின் மலையாளப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழில் பிரசாந்துடன் மம்பட்டியான் மற்றும் ஆதிநாராயணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.