Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர் நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த சாய்ரா பானு!
இவரிடமும் பிரபல நடிகைகளின் செல்போன் எண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இது குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன.
தெலுங்கு நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி இருவரையும் விபசார வழக்கில் ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். போதை பொருள் கடத்தல்காரர்களை பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டபோது, இந்த இரு நடிகைகளும் சிக்கியதாக போலீஸ் கமிஷனர் அறிவித்தார். இரு நடிகைகளுமே தெலுங்குப் பட உலகில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள். இவர்கள் பிடிபட்டதும் உடனடியாக விடுவிக்குமாறு அரசியல்வாதிகளிடம் இருந்து ஏகப்பட்ட நெருக்குதல்கள் வந்துள்ளன போலீசாருக்கு. வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
ஆனால் போலீசார் அதற்கு அடிபணியாமல் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி விட்டனர்.
தற்போது இரு நடிகைகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாய்ரா பானு பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதை பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே தெலுங்கு பிரபல நடிகர் ரவிதேஜாவின் தம்பிகள் பரத்ராஜ், ரகுபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பரத் ராஜூக்கும் சாய்ராபானுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் சிலகாலம் 'லிவிங் டுகெதர்' ஸ்டைலில் குடித்தனம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
எனவே போதை பொருள் கடத்தலில் சாய்ரா பானுவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
நடிகர், நடிகைகளுக்கு சாய்ரா பானு மூலம்தான் போதை பொருள் சப்ளை நடந்து இருக்க வேண்டும் என்றும் போலீஸ் கருதுகிறது. சாய்ரா பானுவிடம் பிரகபல நடிகை நடிகர்களின் தொலைபேசி எண்களும் உள்ளன.
யாருக்கெல்லாம் அவர் போதை மருந்து சப்ளை செய்தார், அவருக்கு போதை மருந்து விற்ற பெரும் புள்ளி யார் போன்றவை குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சாய்ராபானுவின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்து வருகிறார்கள்.