Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு கிடைத்த மரியாதையை என் மகனுக்கும் பெற்றுத் தரும் 'மம்பட்டியான்'! - தியாகராஜன்
இந்தப் படத்தை மறைந்த ராஜசேகர் இயக்கியிருந்தார். இதே படத்தை பின்னர் ரஜினியை வைத்து இந்தியில் கங்குவா என்ற பெயரில் இயக்கி பெரும் வெற்றி பெற்றார் ராஜசேகர்.
கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தை 'மம்பட்டியான்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தில் மம்பட்டியானாக வருபவர் தியாகராஜனின் மகன் பிரசாந்த்.
தனது லட்சுமி சாந்தி மூவீஸ் பேனரில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கும் தியாகராஜன், படம் குறித்து பேசுகையில், "எனக்கு இந்த இன்டஸ்ட்ரியில் ஒரு இமேஜையும் பெரிய புகழையும் தந்த படம் மலையூர் மம்பட்டியான். அதைவிட பெரிய புகழை என் மகனுக்கும் இந்தப் படம் தரும் என நம்புகிறேன்.
இந்த வேடத்தை பிரசாந்த் மிகச் சிறப்பாக செய்துள்ளார் என்று சொல்வது வழக்கமான வார்த்தை ஆகிவிடும். நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அன்றைக்கு என்னை தியாகராஜன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மம்பட்டியான் என்றே கூப்பிடுவார்கள். நாளை இந்தப் படம் வந்தபிறகு பிரசாந்தையும் அப்படி அழைத்தால் ஆச்சரியமில்லை," என்றார்.
படத்தின் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு அசத்தலான ட்ரெயிலரை சமீபத்தில் திரையிட்டுக் காட்டினார்கள். பொன்னர் சங்கருக்கு ஒளிப்பதிவு செய்து பலரின் பாராட்டுக்களையும் பெற்ற ஷாஜி குமார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்.
தமன் இசையமைத்துள்ளார். இளையராஜாவின் புகழ்பெற்ற அந்த இரு பாடல்களையும் இதில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார் தமன்.
அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப மலையூர் மம்பட்டியான் வந்தது. இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து மாற்றங்கள் செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். பிரசாந்த் எதிர்ப்பார்த்த பிரேக் இதில் கிடைக்கும்," என்கிறார் தியாகராஜன் நம்பிக்கையுன்.
நல்ல நடிகரான பிரசாந்துக்கு இந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்பதே நமது வாழ்த்தும்!