twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருட்டு டிவிடி வழக்கு-நடிகை மேனகாவுக்கு வாரண்ட்!

    By Sudha
    |

    Menaka
    திருவனந்தபுரம்: திருட்டு டிவிடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை மேனகாவைக் கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது.

    திருவனந்தபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி திருட்டு வி.சி.டி. மற்றும் டிவிடிக்களை பறிமுதல் செய்தனர். அப்போது கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணையில் நடிகை மேனகா, பட அதிபர் திலீப் ஆகி யோருக்கும் இதில் தொடர்புள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

    இதனையடுத்து போலீசார் நடிகை மேனகா, பட அதிபர் திலீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது வெட்டம், காழ்ச்சை ஆகிய மலையாள புதுப்பட சி.டி.க்களைப் பறி முதல் செய்தனர்.

    இது தொடர்பாக நடிகை மேனகா, பட அதிபர் திலீப் ஆகியோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை திருவனந்தபுரம் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    பலமுறை சம்மன் அனுப்பியும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி அஜிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார், நீதிபதி.

    நடிகை மேனகா, ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X