Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தள்ளிப் போன அழகர்சாமியின் குதிரை!
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அழகர்சாமியின் குதிரை படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் கிரிக்கெட் மோகம் காரணமாக பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது திரைப்படத்துறை. பெரிய படங்களை வெளியிட்டால் மக்கள் தியேட்டருக்கு வராமல், தூக்கப்பட்டு விடுமே என்ற பயத்தில் பல படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள படமான அழகர்சாமியின் குதிரை வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென்று இப்போது தள்ளிப்போடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடப்பதால், பட வசூல் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக படத்தின் வெளியீட்டாளரான க்ளவுட் நைன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் படம் மே மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அழகர்சாமியின் குதிரையில் பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்ட உருவாக்கம் எதுவும் இல்லை. ஆனால் பாடல்கள் வெளியான பிறகு படத்தின் மீதே தனி மரியாதை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு. இளையராஜா அந்த அளவு இசையில் தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். மூன்று பாடல்கள் என்றாலும், இந்த ஆண்டின் இணையற்ற பாடல்களாக அவை பேசப்படும் அளவுக்கு அமைந்துள்ளது படத்துக்கு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பை கிளறிவிட்டுள்ளன.