Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தள்ளிப் போன அழகர்சாமியின் குதிரை!
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அழகர்சாமியின் குதிரை படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் கிரிக்கெட் மோகம் காரணமாக பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது திரைப்படத்துறை. பெரிய படங்களை வெளியிட்டால் மக்கள் தியேட்டருக்கு வராமல், தூக்கப்பட்டு விடுமே என்ற பயத்தில் பல படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள படமான அழகர்சாமியின் குதிரை வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென்று இப்போது தள்ளிப்போடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடப்பதால், பட வசூல் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக படத்தின் வெளியீட்டாளரான க்ளவுட் நைன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் படம் மே மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அழகர்சாமியின் குதிரையில் பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்ட உருவாக்கம் எதுவும் இல்லை. ஆனால் பாடல்கள் வெளியான பிறகு படத்தின் மீதே தனி மரியாதை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு. இளையராஜா அந்த அளவு இசையில் தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். மூன்று பாடல்கள் என்றாலும், இந்த ஆண்டின் இணையற்ற பாடல்களாக அவை பேசப்படும் அளவுக்கு அமைந்துள்ளது படத்துக்கு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பை கிளறிவிட்டுள்ளன.