Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கவர்ச்சி நடிகை மாயா - சீதாவை ஒன்றாக விசாரிக்கும் போலீஸ்!
நடிகை சீதா, பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா. கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தை இவர்.
இவர்கள் இருவரின் வீடும் சாலிகிராமம் புஷ்பா காலனியில் உள்ளது. மாயா வீட்டுக்கு அடுத்துதான் சீதாவின் வீடு உள்ளது. தன்னை மாயா அசிங்கமாக திட்டியதாக சீதா முதலில் புகார் கொடுத்தார். ரோட்டில் கார்கள் நிறுத்தப்படுவதற்கு நான் பொறுப்பு அல்ல என்றும் மாயா என்னை தினமும் ஆபாசமாக திட்டுகிறார் என்றும் மனுவில் சீதா கூறி இருந்தார். சீதா வீட்டில் சதீஷ் என்பவர் மானேஜராக இருக்கிறார். அவரும் மாயா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அரசியல்வாதிகளை வைத்து தன்னை மாயா மிரட்டுவதாகவும் சீதா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடியாக மாயாவும் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தார். சீதா வீட்டுக்கு வருபவர்கள் தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டுச் செல்வதால் தனக்கு தொந்தரவாக உள்ளதாகவும், இதை கண்டித்தால், சீதா ஆபாசமாகத் திட்டுவதாகவும் மாயா தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாகவே சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சீதா தற்போது டி.வி. தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரிடம் கதை சொல்லவும் கால்ஷீட் கேட்கவும் நிறைய பேர் கார்களில் வருகின்றனர். அவர்களது கார்கள் மாயா வீட்டின் எதிரில் நிறுத்தப்படுவதால் இந்த தகராறு மூண்டதாக கூறப்படுகிறது.
இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளார். ஒரே இடத்தில் அருகருகே அவர்களை அமர வைத்து இந்த விசாரணையை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனராம். விசாரணைக்கு வருமாறு சீதா, மாயாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த விசாரணை நடக்கிறது.