புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது! - நடிகர் கரண்

By Shankar

இன்றைக்கு புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது என்றார் நடிகர் கரண்.

உதயா நடிக்கும் "ரா ரா" படத்தின் இசை வெளியீட்டு விழா எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகர் கரண் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் கரண் பேசுகையில், "ரா ரா" படத்தில் திருக்குறளை வைத்து ஒரு பாடல் எடுத்திருப்பது புதுமையான விஷயம். ஒரு குறளை வைத்தே பாடல் எடுப்பது கஷ்டம். ஆனால் இப்படத்தில் நிறைய குறள்களை வைத்து ஒரு பாடலை எடுத்துள்ளனர்.

இது வரலாற்றில் இடம் பெறத்தக்க படமாக இருக்கும். திரைப்படங்களுக்கு டைட்டிலை புரியாத மாதிரி வைப்பது பேஷனாகி விட்டது. அப்போதுதான் படத்தை திரும்பிப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் "ரா ரா" விஷயமுள்ள டைட்டிலாக உள்ளது. தெலுங்கிலும் இதை பயன்படுத்தலாம். உதயா எனது நெருங்கிய நண்பர். 90 ரூபாய், 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் நன்றாக இருக்குமா? என்று யோசிக்கின்றனர். அவர்களை திருப்தி செய்யும் படமாக இது இருக்கும்," என்றார்.

விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பங்கேற்றார். சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்ற அவரை படக்குழுவினர் மேடையில் கவுரவித்தனர்.

பாடல் சிடியை இயக்குநர் எஸ்பி முத்துராமன் வெளியிட, ஏசி சண்முகம், இயக்குநர்கள் அகத்தியன், பிரபு சாலமன் மற்றும் விஜய் பெற்றுக் கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X