Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது! - நடிகர் கரண்
இன்றைக்கு புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது என்றார் நடிகர் கரண்.
உதயா நடிக்கும் "ரா ரா" படத்தின் இசை வெளியீட்டு விழா எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகர் கரண் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் கரண் பேசுகையில், "ரா ரா" படத்தில் திருக்குறளை வைத்து ஒரு பாடல் எடுத்திருப்பது புதுமையான விஷயம். ஒரு குறளை வைத்தே பாடல் எடுப்பது கஷ்டம். ஆனால் இப்படத்தில் நிறைய குறள்களை வைத்து ஒரு பாடலை எடுத்துள்ளனர்.
இது வரலாற்றில் இடம் பெறத்தக்க படமாக இருக்கும். திரைப்படங்களுக்கு டைட்டிலை புரியாத மாதிரி வைப்பது பேஷனாகி விட்டது. அப்போதுதான் படத்தை திரும்பிப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் "ரா ரா" விஷயமுள்ள டைட்டிலாக உள்ளது. தெலுங்கிலும் இதை பயன்படுத்தலாம். உதயா எனது நெருங்கிய நண்பர். 90 ரூபாய், 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் நன்றாக இருக்குமா? என்று யோசிக்கின்றனர். அவர்களை திருப்தி செய்யும் படமாக இது இருக்கும்," என்றார்.
விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பங்கேற்றார். சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்ற அவரை படக்குழுவினர் மேடையில் கவுரவித்தனர்.
பாடல் சிடியை இயக்குநர் எஸ்பி முத்துராமன் வெளியிட, ஏசி சண்முகம், இயக்குநர்கள் அகத்தியன், பிரபு சாலமன் மற்றும் விஜய் பெற்றுக் கொண்டனர்.