Don't Miss!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதுமுகங்களுக்கு வாய்ப்பு... உதயநிதியின் புது முடிவு!
கருணாநிதி குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில், குறைந்த காலத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்தவர் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு பெரிய அரசியல் தலைவரின் வாரிசு என்ற நினைப்பை ஓரங்கட்டிவிட்டு, இவர் சினிமாவில் செய்துவரும் பணிகள் இவரை தனித்து அடையாளம் காட்டுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகஜமாக பழக வைக்கிறது.
இப்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் உதயநிதி. இனி பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, சின்ன பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து தயாராகும் படங்களுக்கும் ஆதரவளிப்பது என முடிவு செய்துள்ளாராம் உதயநிதி.
சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவுக்குப் பிறகு இவரது அடுத்த தயாரிப்பு, 'தென்மேற்கு பருவக்காற்று' படம் தந்த சீனு ராமசாமியின் அடுத்த படம்தானாம்.
சீனு ராமசாமி கூறிய கதைகளில் ஒன்றை படமாக எடுக்க சம்மதித்துள்ள உதயநிதி, அதில் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.