Don't Miss!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்கிறீயா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெலுங்கானா: நாயுடுவுக்கு விஜயசாந்தி கண்டனம்
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த தேர்தலில் தனி தெலுங்கானா அமைப்போம் என்று கூறித்தான் தேர்தலைச் சந்தித்தது. தேர்தலுக்கு பிறகு தோல்வி அடைந்ததால் தெலுங்கானா பிரச்சினையைக் கைவிட முடிவு செய்துள்ளதாக இப்போது அறிவித்துள்ளனர் அக்கட்சியினர்.
தெலுங்கு தேசம் கட்சி தன் சுய லாபத்துக்காக செயல்படுவது இதிலிருந்தே தெளிவாகிறது. சந்திரபாபு நாயுடு தனது சுய லாபத்துக்காக கட்சியை நடத்துகிறார். தனி தெலுங்கானா விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் சந்திரபாபு நாயுடுவை தெலுங்கானா பகுதி மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். உள்ளாட்சித் தேர்தல்களை சரியான கூட்டணியோடு சந்திப்போம், என்று விஜயசாந்தி கூறினார்.