Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெலுங்கானா: நாயுடுவுக்கு விஜயசாந்தி கண்டனம்
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த தேர்தலில் தனி தெலுங்கானா அமைப்போம் என்று கூறித்தான் தேர்தலைச் சந்தித்தது. தேர்தலுக்கு பிறகு தோல்வி அடைந்ததால் தெலுங்கானா பிரச்சினையைக் கைவிட முடிவு செய்துள்ளதாக இப்போது அறிவித்துள்ளனர் அக்கட்சியினர்.
தெலுங்கு தேசம் கட்சி தன் சுய லாபத்துக்காக செயல்படுவது இதிலிருந்தே தெளிவாகிறது. சந்திரபாபு நாயுடு தனது சுய லாபத்துக்காக கட்சியை நடத்துகிறார். தனி தெலுங்கானா விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் சந்திரபாபு நாயுடுவை தெலுங்கானா பகுதி மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். உள்ளாட்சித் தேர்தல்களை சரியான கூட்டணியோடு சந்திப்போம், என்று விஜயசாந்தி கூறினார்.