Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
தெலுங்கானா: நாயுடுவுக்கு விஜயசாந்தி கண்டனம்
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த தேர்தலில் தனி தெலுங்கானா அமைப்போம் என்று கூறித்தான் தேர்தலைச் சந்தித்தது. தேர்தலுக்கு பிறகு தோல்வி அடைந்ததால் தெலுங்கானா பிரச்சினையைக் கைவிட முடிவு செய்துள்ளதாக இப்போது அறிவித்துள்ளனர் அக்கட்சியினர்.
தெலுங்கு தேசம் கட்சி தன் சுய லாபத்துக்காக செயல்படுவது இதிலிருந்தே தெளிவாகிறது. சந்திரபாபு நாயுடு தனது சுய லாபத்துக்காக கட்சியை நடத்துகிறார். தனி தெலுங்கானா விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் சந்திரபாபு நாயுடுவை தெலுங்கானா பகுதி மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். உள்ளாட்சித் தேர்தல்களை சரியான கூட்டணியோடு சந்திப்போம், என்று விஜயசாந்தி கூறினார்.