Don't Miss!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தெலுங்கானா: நாயுடுவுக்கு விஜயசாந்தி கண்டனம்
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கடந்த தேர்தலில் தனி தெலுங்கானா அமைப்போம் என்று கூறித்தான் தேர்தலைச் சந்தித்தது. தேர்தலுக்கு பிறகு தோல்வி அடைந்ததால் தெலுங்கானா பிரச்சினையைக் கைவிட முடிவு செய்துள்ளதாக இப்போது அறிவித்துள்ளனர் அக்கட்சியினர்.
தெலுங்கு தேசம் கட்சி தன் சுய லாபத்துக்காக செயல்படுவது இதிலிருந்தே தெளிவாகிறது. சந்திரபாபு நாயுடு தனது சுய லாபத்துக்காக கட்சியை நடத்துகிறார். தனி தெலுங்கானா விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் சந்திரபாபு நாயுடுவை தெலுங்கானா பகுதி மக்கள் மன்னிக்கமாட்டார்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். உள்ளாட்சித் தேர்தல்களை சரியான கூட்டணியோடு சந்திப்போம், என்று விஜயசாந்தி கூறினார்.