Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை சரண்யா மாயம்
காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் சரண்யா. அப்படத்தில் இவர்தான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தி் சந்தியா நாயகியாகி விட்டார். இருந்தாலும் சரண்யாவை, சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் பாலாஜி.
பின்னர் பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது மழைக்காலம் என்ற படத்தில் தனி நாயகியாக நடித்து வருகிறார். இவரை 3 மாதங்களாக காணவில்லையாம். இதுகுறித்து இப்போது புகார் கொடுத்துள்ளார் அவரது தாயார்.
இதுகுறித்து அவரது தாயார் மஞ்சுளா போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்தார்.
அதில், என் மகள் சரண்யா காதல் படத்தில் அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்துள்ளார். நான் கோடம்பாக்கம் தங்கா நகரில் மகளுடன் வசித்து வந்தேன்.
மூன்று மாதத்துக்கு முன்பு திடீரென்று சரண்யா மாயமானார். அவளை எங்கே தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. அப்போதும் வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை.
சரண்யா படங்களில் நடித்ததால் அளவுக்கு அதிகமாக அவரிடம் பணம் உள்ளது. யாரோ தூண்டி விட்டு சரண்யாவை என்னுடன் வரவிடாமல் தடுக்கின்றனர்.
நான் தனியாக கஷ்டப்படுகிறேன். எனக்கு 3 ஆபரேஷன் நடந்துள்ளன. அப்போதும் அவள் பார்க்க வரவில்லை. சரண்யாவை கண்டு பிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மஞ்சுளா கூறுகையில், ஷூட்டிங் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு மூன்று மாதங்களுக்கு முன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். உடல்நிலை சரி இல்லாத நிலையிலும் பார்க்க வரவில்லை. யார் பிடியிலேயோ அவர் இருக்கிறார்.
எனது சொத்தில் கூட இனிமேல் உரிமை கொண்டாட முடியாது. அவரது நிலைமை என்ன ஆனது என்று எனக்கு பயமாக இருக்கிறது என்றார் மஞ்சுளா.