Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அருண்விஜய் துணிச்சல் புகார்
இது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் அருண் விஜய் அளித்துள்ள புகார்:
"2004ம் ஆண்டில் என்னை வைத்து தொடங்கப்பட்ட படம், 'துணிச்சல்.' இந்த படம் முடிவடையாமல் இருந்தது. நான் அந்த படத்துக்கு, 'டப்பிங்' பேசவில்லை. ஆனால், 'துணிச்சல்' படம் வருகிற வெள்ளிக் கிழமை ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. என் குரல் இல்லாமலே அந்த படம் திரைக்கு வருவதாக கேள்விப்படுகிறேன்.
நான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'மலை மலை' படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தவறாக பயன்படுத்தி, 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டுவருவதாக அறிகிறேன். என் குரல் இல்லாமல், 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டு வரக்கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும்.
'மலை மலை' படத்தை அடுத்து நான் நடித்து வரும் படம், 'மாஞ்சா வேலு'தான் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...'', என்று அருண் விஜய் கூறியுள்ளார்.