சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆக. 1க்கு ஒத்திவைப்பு
சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வல்லக்கோட்டை என்ற திரைப்படத்தைத் தயாரித்த ராஜா என்பவர் சக்சேனா மீது பண மோசடிப் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சக்சேனாவின் வக்கீல் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications