Don't Miss!
- Sports GT vs DC : டெல்லி வைத்த ஆப்பு.. ஐபிஎல் தொடரின் மோசமான ஸ்கோரை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Automobiles ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான மோகன், ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பால கிருஷ்ணன் என்ற ஆடிட்டர் மூலமாக சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான சரண் எனக்கு அறிமுகமானார்.
சில வழக்குகள் சம்பந்தமாக என்னுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நான் வாதாடியுள்ளேன். இதற்காக அவர் எனக்கு ரூ.6 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இந்த பணத்தை பலமுறை நான் திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லை.
இதற்காக அவர் கொடுத்த செக்குகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன. எனவே அவர் மீது செக் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வருகிறது. 3 முறை சரண் சார்பில் அவரது வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி அவகாசம் கேட்டார். ஆனால் சரண் ஆஜராகவில்லை.
இதையடுத்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சரணுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
வளசரவாக்கம் போலீசார் சரணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 3-ந்தேதி மீண்டும் விசார ணைக்கு வருகிறது. இதையடுத்து சரண் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் சரணடையக்கூடும் எனத் தெரிகிறது.