Don't Miss!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமீருக்கு நோட்டீஸ்!
இந்தப் படத்தின் 7 ஏரியா உரிமைக்கு இன்னும் அமீர் பணம் தரவேண்டும் என்று கோரி, கோர்ட்டுக்குப் போயிருக்கிறார் ஸ்டுடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜா.
இந்தப் படத்துக்கு இன்னும் தனது சம்பள பாக்கி நிலுவையில் இருப்பதாக அமீர் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
பருத்தி வீரன் என்ற ஒரே படத்தில் கார்த்தி என்ற புதுமுகம் சூப்பர் ஆக்ஷன் நாயகனாக மாறிவிட்டார். ஆனாலும் அமீருக்கு பிரச்சினைகள் தொடர்கின்றன.
தனக்கு அமீர் ரூ.1.53 கோடி பாக்கி தரவேண்டும் என்றும் அதைத் தராமல் அமீர் முதல்முறையாக நாயகனாக நடித்து வெளிவந்துள்ள யோகி படத்தை திரையிட விடக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார் ஞானவேல் ராஜா.
இதுகுறித்த மனுவில், "7 மாவட்டங்களுக்கு 'பருத்திவீரன்' படத்தின் விநியோக உரிமை அமீருக்கு வழங்கப்பட்டது என்றும், இதுதொடர்பாக ரூ.1 கோடியே 53 லட்சத்தை எனக்கு அவர் தரவேண்டியுள்ளது என்றும் மனுவில் கூறியிருந்தார். ரூ.1 கோடியை டெபாசிட் செய்யாமல் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது" என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ராஜசூரியா நேற்று விசாரித்தார். இந்த மனு மீண்டும் வருகிற புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதுபற்றி பதில் தருமாறு அமீருக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.