சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!

By Shankar

Latha and Rajinikanth
சென்னை: பொதுவாக எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் சத்தமில்லாமல் அமைதியாக வந்துபோவார் ரஜினி. தன்னால் யாருக்கும் இடைஞ்சல் என்ற செய்தி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவர் சிறப்பு.

ஆனால் ரசிகர்கள் அவருக்காக ஆடம்பர விழா, வரவேற்பு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த முறை ரசிகர்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது.

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று, பூரண நலத்துடன் புதுப்பிறவி எடுத்துத் திரும்பும் ரஜினிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்துக்கு ஒரு நிபந்தனையோடு சம்மதம் தந்துள்ளார் ரஜினியின் மனைவி லதா ரஜினி.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ சிறு இடையூறும் ஏற்படக்கூடாது என்ற நிபந்தனைதான் அது.

திங்கள்கிழமை தன்னைச் சந்தித்த சென்னை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், சைதை மன்ற நிர்வாகி சைதை ஜி ரவி மற்றும் சிதம்பரம் ரமேஷ் ஆகியோர், ரஜினிக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடன் குறித்து லதாவிடம் தெரிவித்து, ரஜினிக்கு பிரசாதம் அளித்தனர்.

அப்போது ரசிகர்களின் இந்த அன்பும் பிரார்த்தனையும்தான் ரஜினியைக் காத்தது என்று தெரிவித்தார் லதா.

பின்னர் ரஜினி சென்னை வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும், அவரைச் சந்திக்கவும் லதாவிடம் அனுமதி கேட்டனர். "நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கிற நிலையில் இப்போது நீங்கள் இல்லை. எனவே, எந்த இடையூறும் இல்லாமல், பாதுகாப்பாக நடத்துங்கள். ரஜினி சார் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே உங்களுக்கு தகவல் தருகிறேன்," என்றார்.

ரஜினி தொடர்பான ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு, லதா ரஜினி நேரடியாக அனுமதி தருவது இதுவே முதல்முறை என்பதால், மிகுந்த உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X