சக்சேனாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சேலத்தைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் செல்வராஜ், சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் சக்சேனா. தொடர்ந்து அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் போடப்பட்டன. இவற்றில் சேலம் விநியோகஸ்தர்கள் கொடுத்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
மீதி 4 வழக்குகளில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், சக்சேனா மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வந்ததும், அந்த நிறுவன கணக்கில் லட்சக் கணக்கில் பணம் டெபாசிட் செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. வங்கியில் மனைவி, மகள் பெயரில் டெபாசிட் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளதாம். மொத்தம் ரூ 50 லட்சம் வரகை இப்படி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக்த தெரிகிறது.
இந்த வங்கி கணக்கை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சக்சேனா வேறு எந்த நிறுவனத்திலாவது பணம் முதலீடு செய்துள்ளாரா? என்றும் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











