twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    88 வயது முதிய முன்னாள் நடிகருக்கு ஜெ உதவி!

    By Chakra
    |

    Jayalalitha
    சென்னை: 88 வயது முதியவருக்கு எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம் மாதம் ரூ 1500 உதவித் தொகை வழங்கிட உத்தரவிட்டார் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா. இதுதவிர ரூ.10,000 ரொக்கமும் வழங்கினார்.

    சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 88 வயதுடைய பெரியவர் கணேச நாடார், தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும், முதுமையின் காரணமாக உழைக்க முடியாமல் வறுமையில் வாடுவதாகவும் தெரிவித்து, தனக்கு உதவி செய்ய வேண்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.

    இதையடுத்து கணேச நாடாரை ஜெயலலிதா தமது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து, அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரூ.10,000 வழங்கியதோடு, எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து மாதா மாதம் ரூ.1,500 வழங்கவும் உத்தரவிட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X