Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்?
துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயமாகி விட்டார். கேரள தொழில் அதிபருடன் அவர் ஓடிவிட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் நாகர்கோவில் ராமன் புதூரைச் சேர்ந்த ராஜா ஒரு புகார் மனு அளித்தார். அதில், "என்னுடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.
அவர் கடந்த 24-4-2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் கடந்த 23-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.
அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் மீனாவுடன் பழகி உள்ளார். அவரும் மீனாவுடன் சென்னை வந்தாராம். இதனால் மீனா கேரளா தொழில் அதிபருடன் சென்று விட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!