Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒச்சாயி திரைப்படத்திற்கு வரி விலக்கு-முதல்வருக்கு தயாரிப்பாளர் நன்றி
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ.ஆசைத்தம்பி என்பவர் இயக்கியுள்ள படம் ஒச்சாயி. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து வருகிறது தமிழக அரசு.
ஆனால் ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறி அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது அரசு. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரின் குல தெய்வம்தான் ஒச்சாயி அம்மன். எனவே இது சுத்தமான தமிழ்ப் பெயர்தான். இப்படத்துக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. சிபிஐ தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இதுகுறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது ஒச்சாயி படத்துக்கும் கேளிக்கை வரி விலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் திரவிய பாண்டியன், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.