Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பீப் பாடல்- சிம்பு, அனிருத்துக்கு கோவை போலீஸ் மீண்டும் சம்மன்! ஜன.2-ல் ஆஜராக உத்தரவு!!
கோவை: சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில் ஜன.2-ந் தேதி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் கொச்சையான ஆபாசப் பாடல் ஒன்றை சிம்பு பாட அதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் இந்த பாடலை பாடிய சிம்பு, இசையமைத்த அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் முதலில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிம்புவும் அனிருத்தும் 19-ந் தேதி ஆஜராக போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரது மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால் சிம்பு நேரில் ஆஜராக 1 மாத காலம் அவகாசம் கோரியிருந்தார்; அனிருத்தோ தமக்கு இதில் சம்பந்தமே இல்லை எனக் கூறி கனடாவிலேயே தங்கிவிட்டார். இதன் பின்னர் சிம்பு மீது சென்னை போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் வருத்தம் தெரிவித்து விளக்கம் ஒன்றை கொடுத்தார். சிம்புவும் தாம் செய்தது சரியானதே என ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சிம்புவும் அனிருத்தும் ஜனவரி 2-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு கோவை போலீசார் இன்று மீண்டும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளார். இதனையும் இருவரும் நிராகரிப்பார்களா? அப்போது போலீஸ் கைது நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்பது தெரியவரும்.