Don't Miss!
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பீப் பாடல்- சிம்பு, அனிருத்துக்கு கோவை போலீஸ் மீண்டும் சம்மன்! ஜன.2-ல் ஆஜராக உத்தரவு!!
கோவை: சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில் ஜன.2-ந் தேதி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் கொச்சையான ஆபாசப் பாடல் ஒன்றை சிம்பு பாட அதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் இந்த பாடலை பாடிய சிம்பு, இசையமைத்த அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் முதலில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிம்புவும் அனிருத்தும் 19-ந் தேதி ஆஜராக போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரது மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால் சிம்பு நேரில் ஆஜராக 1 மாத காலம் அவகாசம் கோரியிருந்தார்; அனிருத்தோ தமக்கு இதில் சம்பந்தமே இல்லை எனக் கூறி கனடாவிலேயே தங்கிவிட்டார். இதன் பின்னர் சிம்பு மீது சென்னை போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் வருத்தம் தெரிவித்து விளக்கம் ஒன்றை கொடுத்தார். சிம்புவும் தாம் செய்தது சரியானதே என ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சிம்புவும் அனிருத்தும் ஜனவரி 2-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு கோவை போலீசார் இன்று மீண்டும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளார். இதனையும் இருவரும் நிராகரிப்பார்களா? அப்போது போலீஸ் கைது நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்பது தெரியவரும்.