Don't Miss!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா?
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் '2.ஓ' திரைப்படம் 'காலா' படத்துக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில், கிராஃபிக்ஸ் பணிகள் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
இதனால் அதற்கு முன்பே, ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. காலா படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கிராஃபிக்ஸ் பணிகள் முடிந்து '2.ஓ' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், '2.ஓ' படத்தின் டீசர் மே 27-ம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஃபைனல் போட்டியின்போது வெளியிடப்பட இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில், சிஎஸ்கே மேட்ச்சின்போது, ஆர்ஜே பாலாஜியின் புதிய பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல, ரஜினி படத்தின் டீசரும் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
'2.ஓ' படத்தின் ப்ரொமோஷனுக்காக பல கோடிகளை செலவு செய்து வரும் லைகா நிறுவனம், டீசர் வெளியிட பயங்கர விளம்பரங்களை மேற்கொள்ளும். இப்படி திடீரென வெளியிடவேண்டிய அவசியமில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.