Don't Miss!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்!
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அந்த இசை வெளியீட்டின் போது படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களில் இரண்டு பாடல்களை மட்டுமே வெளியிட்டார்கள்.
மதன் கார்க்கி எழுதிய 'எந்திர லோகத்து சுந்தரியே'.... மற்றும் 'ராஜாளி'...ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
மூன்றாவது பாடல்
மூன்றாவது பாடலான மறைந்த நா.முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...' என்ற பாடலை அப்போது வெளியிடவில்லை. அந்தப் பாடலுக்கான இசை வேலைகள் முழுவதுமாக முடியவில்லை என்பதால் அப்போது வெளியிட முடியவில்லை என்றார்கள்.
விரைவில் வெளியீடு
விரைவில் 'புல்லினங்காள்...' பாடலை வெளியிட உள்ளார்களாம். பறவைகள் மேல மனிதன் கொண்ட காதல்தான் அந்தப் பாட்டு. பறவைகளுக்காக மனிதனின் குரலாக அந்தப் பாட்டு ஒலிக்கும் எனக் கூறியுள்ளார்கள்.
அழகான வரிகள்
"ரொம்ப அழகான வரிகள், அழகான சொற்கள். முத்துக்குமார் அவர்களோட வரிகள் இந்தப் படத்துல இருக்கிறது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்துல நானும் பங்கெடுத்துக்கறது மகிழ்ச்சியாக இருக்கு" எனக் கூறியிருக்கிறார் மதன் கார்க்கி.
கடைசி பாடல் அல்ல
'2.O' படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...' பாடல்தான் அவர் எழுதிய கடைசி பாடல் என்ற ஒரு தவறான கருத்து இருக்கிறது. ஆனால், நா.முத்துக்குமார் அதற்குப் பிறகும் சில பாடல்களை எழுதியிருக்கிறாராம். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.