கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











