Don't Miss!
- News ‛‛பானை சின்னம் கிடையாது’’.. உறுதியான கூறிய தேர்தல் ஆணையம்.. திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஷாக்
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.
ஹைதராபாத்: பிரபல டோலிவுட் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.
Recommended Video
பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு அருகே பிளெக்ஸ் வைக்க சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர்.
மேலும், 3 ரசிகர்கள் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ..அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !
49வது பிறந்தநாள்
1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்த நடிகர் பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஏகப்பட்ட பிரபலங்கள் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு வக்கீல் சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
பிளெக்ஸ் வைக்க சென்ற இடத்தில்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று 49வது பிறந்த நாள் விழா. இதற்காக அவரது வீட்டு முன்னாடி பிளக்ஸ் வைப்பதற்காக சேகா சேகர், அருணாசலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூன்று ரசிகர்கள் நேற்று இரவு அங்கு சென்றனர்.
மூன்று பேர் பலி
25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 லட்சம் ரூபாய்
எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 3 ரசிகர்கள் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். உயிரிழந்த நபர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை நடிகர் பவன் கல்யாண் மற்றும் வக்கீல் சாப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.