Don't Miss!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
விபச்சாரம்-ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை!
விபச்சார வழக்கில் சிக்கிய தெலுங்கு நடிகைகள் ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை வருகிறது
விபச்சார வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்துள்ள தெலுங்கு நடிகைகள் சாய்ராபானு, ஜோதி ஆகியோருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நடிக்க தடை விதிக்கவுள்ளதாம்.
தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர்கள் சாய்ரா பானுவும், ஜோதியும். தமிழுக்கும் இவர்கள் சேவையாற்ற வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களை ஆந்திர போலீஸார் விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பி ரகுபாபு, பரத்ராஜ் ஆகியோர் நைஜீரிய வாலிபரிடம் போதை பொருள் வாங்கி கையும் களவுமாக சிக்கிய போதுதான் இவ்விரு நடிகைகளும் பிடிபட்டனர்.
இதனால் தெலுங்கு பட உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.இவர்களின் கைது மற்றும் ரவி தேஜாவின் தம்பிகள் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகளுக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திரிஷா, காம்னா ஜெத்மலானி, சார்மி ஆகியோரின் செல்போன் நம்பர்கள் போதை பொருள் வழக்கில் கைதான நைஜீரிய வாலிபரின் மொபைலில் இருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இதனை திரிஷா உடனடியாக மறுத்து விட்டார். அதேசமயம், அவரது நண்பரான சிட்னி ஸ்லேடனின் எண் நைஜீரியக் கும்பலிடம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது சாய்ரா பானுவையும், ஜோதியையும் ஆந்திர நடிகர் சங்கம் தடை விதித்துள்ளது. தெலுங்கு பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விபசார வழக்கில் கைதான நடிகைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவர்களால் தெலுங்குத் திரையுகின் பெயர் கெட்டுப் போய் விடும் என தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து அவர்களுக்குத் தடை விதிக்கப் போகிறது நடிகர் சங்கம்.
இருவருக்கும் எதிரான ஆதாரங்களை போலீஸாரிடம் கேட்டுள்ளோம். கிடைத்ததும் நடிக்கத் தடை விதிக்கப்படும் என சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் நடிகை புவனேஸ்வரி இப்படி விபச்சார வழக்கில் சிக்கியபோது அவர் மீது நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், போலி விசா வழக்கில் சிக்கிய நடிகை புளோரா மீது தடை விதித்து பின்னர் அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.