குடிபோதையில் டிரைவிங்-சிக்கலில் அரபு நடிகை
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரபல நடிகை, குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சிக்கலில் மாட்டியுள்ளார்.
ரமதான் தொடர்பான டிவி தொடர்களின் பணியில் தொடர்ந்து ஈடுபட்டதால் ஏற்பட்ட வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் குடித்ததாக அந் நடிகை கூறியுள்ளார்.
40 வயதாகும் அந்த நடிகை டிவி தொடர்களில் நடித்து வருபவர் ஆவார். அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கினார். இதில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து துபாய் போக்குவரத்து கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகையின் வக்கீல் வாதிடுகையில், நாட்டுக்கு வெளியேதான் அவர் குடித்தார். மேலும் விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.
வழக்கை விசாரித்த போக்குவரத்து கோர்ட், நடிகைக்கு 20,000 திர்ஹாம் அபராதம், ஒரு மாத சிறைத் தண்டனை, ஒரு வருடத்திற்கு வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து ஆகியவை தண்டனையாக விதிக்கப்பட்டது.
இதையடுத்து துபாய் உயர்நீதிமன்றத்தில் அந்த நடிகை அப்பீல் செய்தார். அதில், நான் தொடர்ந்து ரமதான் தொடர்பான தொடர்களில் நடித்து வந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாலும், வேலைப்பளு மிகுதியாலும் கொஞ்சம் போல மது அருந்தினேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. அவற்றை நான் கவனிக்க வேண்டும். எனவே என் மீது இரக்கம் காட்டுமாறு கோரியுள்ளார்.
இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











