Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட்
மன்சூர் அலிகான் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், திரைப்படம் தயாரிப்பதற்காக சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப் கடந்த 22.12.2008 அன்று என்னிடம் ரூ. 6 லட்சம் வாங்கினார். இந்த தொகையை பல்வேறு தவணைகளாக என்னிடம் பெற்றுக் கொண்டார். இந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.
இதே போல அவரது மனைவி ஜெரீனா என்பவரும் என்னிடம் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கடன் வாங்கினார். இவரும் பணத்தை திருப்பித் தரவில்லை.
அதற்கு பதில் காசோலைகளை இருவரும் தனித்தனியாக கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் மன்சூர்.
இந்த மனு எழும்பூர் 14வது கோர்ட் நீதிபதி காஞ்சனா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிட்டிபாபுவும், ஜெரீனாவும் ஆஜராகவில்லை.
இதையடுத்து இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி மாஜிஸ்திரேட் காஞ்சனா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
சிட்டிபாபு பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.