Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முத்தூட் அதிபர் மகன் கொலை- பாவனாவுக்கு தொடர்பில்லை: மேனேஜர்
கேரளாவில் மிகவும் பிரபலமான முத்தூட் நிறுவனங்களின் அதிபரின் மகன் பால் ஜார்ஜ் சமீபத்தி்ல படுகொலை செய்யப்பட்டார்.
கொலை நடந்த சமயத்தில் பால் ஜார்ஜின் காரில் பிரபல நடிகை ஒருவர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த நடிகையின் கைப்பை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அந்த நடிகை மலையாளத்திலிருந்து தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த நடிகை கொலையாளிகளிடம் தன்னைக் காட்டிக் கொடுத்து விட வேண்டாம் என்று கெஞ்சியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பாவனாதான் அந்த நடிகை என்று கேரளாவில் பரபரப்பு எழுந்துள்ளது.
ஆனால் இதை பாவனாவின் மேனேஜர் அஜய் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையி்ல, பாவனாவுக்கும், சம்பந்தப்பட்ட கொலைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. கொலை நடந்த சமயத்தில் பாவனா, நடிகர் பிருத்விராஜுடன், ஜோஷி இயக்கத்தில் உருவாகும் மலையாளப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார்.
பால் ஜார்ஜ் எப்படி இருப்பார் என்றே பாவனாவுக்குத் தெரியாது. இந்த நிலையில் அவரது பெயரை இழுத்து விடுவதைப் பார்க்கும்போது, யாரோ சிலர் வேண்டும் என்றே சதிவேலைகளில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்றார்.