Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆஸி. இனவெறி-டாக்டர் பட்டத்தை நிராகரித்த அமிதாப்
உலக பொழுதுபோக்குத் துறைக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய சேவையைப் பாராட்டி குவீன்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அமிதாப் பச்சனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது. ஜூலை மாதம் இந்த பட்டம் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை தற்போது அமிதாப் நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். அதில்,
மிகுந்த அதிர்ச்சியுடனும், வேதனையுடனும் நான் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்த சம்பவங்கள் டிவிகளில் தினசரி ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், என்னால் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று அளிக்கும் கெளரவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நாட்டு மக்கள் அங்கு அவமானப்படுத்தப்பட்டு, மனிதாபிமானமே இல்லாத வகையில் தாக்கப்படும்போது அதை என்னால் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. அதை மறந்து விட்டு, என்னால் அந்த நாட்டில் தரப்படும் விருதை பெற முடியாது.
எனது நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் ஒரு நாட்டிடமிருந்து நான் கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெறுவதற்கு எனது மனசாட்சி அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.