வேலைக்காரப் பெண்ணை ஷைனிதான் கற்பழித்தார் - டிஎன்ஏ சோதனை முடிவு

இதுகுறித்து மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறுகையில், வேலைக்காரப் பெண் கற்பழிக்கப்பட்டது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணை நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த வாதத்திற்கு வலுவான முறையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன என்றார்.
ஷைனி அகுஜா தற்போது ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 14ம் தேதியன்று தனது வீட்டில் தனியாக இருந்த வேலைக்காரப் பெண்ணை கற்பழித்து விட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவர் நல்லவர், பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்பவர், வேண்டுமானால் வேலைக்காரப் பெண்தான் எனது கணவரை தூண்டி விட்டிருக்க வேண்டும் என்று ஷைனியின் மனைவி கூறியிருந்தார். இந்த நிலையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன.
இதற்கிடையே, ஜாமீன் கோரி ஷைனி சார்பில் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











