Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வேலைக்காரப் பெண்ணை ஷைனிதான் கற்பழித்தார் - டிஎன்ஏ சோதனை முடிவு
இதுகுறித்து மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறுகையில், வேலைக்காரப் பெண் கற்பழிக்கப்பட்டது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில், தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணை நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த வாதத்திற்கு வலுவான முறையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன என்றார்.
ஷைனி அகுஜா தற்போது ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 14ம் தேதியன்று தனது வீட்டில் தனியாக இருந்த வேலைக்காரப் பெண்ணை கற்பழித்து விட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கணவர் நல்லவர், பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்பவர், வேண்டுமானால் வேலைக்காரப் பெண்தான் எனது கணவரை தூண்டி விட்டிருக்க வேண்டும் என்று ஷைனியின் மனைவி கூறியிருந்தார். இந்த நிலையில் டிஎன்ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன.
இதற்கிடையே, ஜாமீன் கோரி ஷைனி சார்பில் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.