பிரபு தேவா - ரம்லத் விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு!

நடிகர் பிரபு தேவா, அவரது மனைவி ரமலத் ஆகியோர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ் வழக்கு இன்று முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இருவரும் நேரில் ஆஜராக முடியாததற்காக காரணம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 10-ந் தேதிக்கு விசாணையை தள்ளி வைத்தார்.
ஜூலை மாத இறுதிக்குள் இந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதற்காக, ரம்லத்துக்கு தருவதாக ஒப்புக் கொண்ட செட்டில்மெண்டை முழுவதுமாக பிரபு தேவா கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











