Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரேணிகுண்டா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை
மகேந்திரகுமார் ஜெயின் என்பவர் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள படம் ரேணிகுண்டா. இந்த படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் உத்தம்சந்த் எனும் பைனான்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் படத்தின் தயாரிப்பாளர் தன்னிடமிருந்து 37.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாகவும், அதனை திருப்பித் தராததால் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா டிசம்பர் 7ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யவும் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்னொரு பைனான்சியரும் இதே படத்திற்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, முந்தைய வழக்கின் உத்தரவே இதற்கும் பொருந்தும் என்று கூறினார்.