Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரேணிகுண்டா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை
மகேந்திரகுமார் ஜெயின் என்பவர் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள படம் ரேணிகுண்டா. இந்த படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் உத்தம்சந்த் எனும் பைனான்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் படத்தின் தயாரிப்பாளர் தன்னிடமிருந்து 37.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாகவும், அதனை திருப்பித் தராததால் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா டிசம்பர் 7ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யவும் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்னொரு பைனான்சியரும் இதே படத்திற்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, முந்தைய வழக்கின் உத்தரவே இதற்கும் பொருந்தும் என்று கூறினார்.