Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரேணிகுண்டா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை
மகேந்திரகுமார் ஜெயின் என்பவர் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள படம் ரேணிகுண்டா. இந்த படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் உத்தம்சந்த் எனும் பைனான்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் படத்தின் தயாரிப்பாளர் தன்னிடமிருந்து 37.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாகவும், அதனை திருப்பித் தராததால் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா டிசம்பர் 7ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யவும் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்னொரு பைனான்சியரும் இதே படத்திற்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, முந்தைய வழக்கின் உத்தரவே இதற்கும் பொருந்தும் என்று கூறினார்.