Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
30 இயர்ஸ் ஆப் வசந்திசம்.. 20 இயர்ஸ் ஆப் ரிதம்.. ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்ஸ்!
சென்னை : சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் இயக்குனர் வசந்த்-க்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது.
இவரது திரைப்படங்கள் அனைத்தும் ஆரவாரமில்லாமல் கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல் எதார்த்தமான நடிப்புடன் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு உருவாக்குவதால் தனிச் சிறப்பை பெற்றுள்ளது.
அவ்வாறு இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகளை கடந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதியான இதே நாள் இவர் இயக்கிய ரிதம் திரைப்படம் வெளியாகி 20ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
என்றும் இளமை மாறா...16 வயதினிலே வெளியாகி 43 ஆண்டு நிறைவு !
கேளடி கண்மணி
இயக்குனர் வசந்த் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் தோன்றுவது தரமான இயக்குனர் என்ற அடையாளமே அந்த அளவிற்கு தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து வசீகரித்து வரும் இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான " கேளடி கண்மணி" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத் துறைக்கு இயக்குனராக அறிமுகமானார்.
அழகான திரைப்படங்களை
கே பாலச்சந்தர் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் ஆரவாரமில்லாமல் கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல் எதார்த்தமான நடிப்புடன் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு அனைவரும் ரசிக்கும் வகையில் அழகான திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர் ஆவார்.
சிவப்பு கம்பளம்
கேளடி கண்மணி திரைப்படத்திற்குப்பின் நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய இவரை தமிழ் ரசிகர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றனர்.
ரிதம்
இந்நிலையில் 2000ம் ஆண்டு அர்ஜுன், மீனா, ஜோதிகா நடிப்பில் வசந்த் இயக்கிய இந்த " ரிதம் " திரைப்படம் அனைவரின் இதயங்களையும் தொட்டு இன்று வரை அனைவரது ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.
நதியே நதியே
இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி "நதியே நதியே" பாடல் இன்று வரை அனைத்து இடங்களிலும் ஒலித்து கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பு வயதினரின் பேவரேட் பாடலாகவும் உள்ளது.
20 இயர்ஸ் ஆப் ரிதம்
இவ்வாறு தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் தனித்துவமானவராக இன்று வரை விளங்கி வரும் இயக்குனர் வசந்த் திரைத்துறையில் அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது மற்றும் இவர் இயக்கிய ரிதம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்து ரசிகர்களுக்கு பிடித்தமான திரைப்படமாக இருப்பதை தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் இதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.