Don't Miss!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூர்யாவைப் பார்க்கலாம்... ஆர்யாவைப் பார்க்கலாம்... மாணவிகளை கவர்ந்து வந்த விழாக் குழுவினர்
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த நம்பியார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளை அழைத்து வந்திருந்தனர் விழாக்குழுவினர்.
மாணவிகளை இரவு பத்துமணிவரைக்கும் விழா நடக்கும் இடத்தில் வைத்திருந்து விட்டு பாதுகாப்பு இன்றி திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.
விடுதியில் தங்கிப் படிக்கும்மாணவிகளை இவ்வாறு அனுப்பிவைத்தது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
நம்பியார் திரைப்படம்
நடிகர் ஸ்ரீகாந்த் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள படம் நம்பியார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அந்த விழாவுக்கு 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்..
சூர்யா, ஆர்யா
நம்பியார் படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு சூர்யா, ஆர்யா, பவர்ஸ்டார் சீனிவாசன், விமல், ஜீவா போன்ற நட்சத்திரங்கள் உள்ளே வரும்போதெல்லாம் மாணவிகளின் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளந்தன.
விசில் போட்ட மாணவிகள்
மாலை 5 மணிக்கு தேவி தியேட்டருக்கு அழைத்து வரப்பட்ட அந்த மாணவிகள், 9.30 மணிக்கு விழா முடிவடையும் அங்கேயே இருந்தனர். சுமார் ஐந்து மணி நேரம் அங்கிருந்த மாணவிகளுக்கு ஒரு பெப்ஸியையும், ஒரு பப்ஸையும் கொடுத்து அனுப்பி வைத்தனர். விழாவிற்கு வந்த அவர்கள் எப்படி திரும்பிச்செல்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர்.
சூர்யாவைப் பார்க்கலாம்
சினிமா விழாவுக்கு கல்லூரி மாணவிகளை யார் கூட்டி வந்தார்கள்? என்று அங்கு வந்த மாணவிகள் சிலரிடம் கேட்டபோது, சூர்யாவைப் பாக்கலாம் வான்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க என்று பல மாணவிகள் பதில் அளித்தனர்.
கல்லூரி விடுதி மாணவிகள்
அந்த மாணவிகள் அனைவருமே இரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள்! அதுமட்டுமல்ல, அக்கல்லூரிகளின் ஹாஸ்டல்களில் தங்கி படித்து வரும் மாணவிகள்! அதைவிட முக்கியமான விஷயம்... அவர்கள் அனைவருமே வெளியூரைச் சேர்ந்த ஏழை மாணவிகள்!
நடிகர்களைப் பார்க்க
ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் இந்த மாணவிகளை சினிமா நடிகர்களைக் காட்டுகிறோம் என்ற ஆசையைக் காட்டி இந்த விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஆசை வார்த்தைக்கூறி
ஒரு சினிமாவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை வரவழைக்க என்ன காரணம்? யார் இவர்களை ஏற்பாடு செய்தது? சூர்யாவைப் பாக்கலாம்...ஆர்யாவைப் பாக்கலாம்..சந்தானத்தைப் பாக்கலாம் என்றெல்லாம் மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி 300 கல்லூரி மாணவிகளையும் அழைத்து வந்திருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
என்ன நடவடிக்கை
கல்லூரியில் படிக்க அனுப்பிவைக்கப்பட்ட பெண் பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்களுக்குத் தெரியாமல், சினிமா விழாக்களுக்கு அனுப்பியவர்கள் மீது சம்மந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?