Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முஸ்லீம் என்பதால் வீடு தர மறுக்கிறார்கள் - நடிகர் இம்ரான் ஹஷ்மி புகார்
மும்பையின் பெரும் பணக்காரர்கள் வாழும் பாலி ஹில் பகுதியில் நிப்பானா கூட்டுறவுக் கழகம் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி விற்கிறது. இந்த நிறுவனத்தை அணுகிய இம்ரான் ஹஷ்மி ஒரு அபார்ட்மெடன்ட் வாங்கி முயன்றுள்ளார்.
ஆனால் தான் ஒரு முஸ்லீம் என்பதால் அந்த கழகம் வீடு தர மறுப்பதாக இப்போது இம்ரான் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிர சிறுபான்மையினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட வீட்டு வசதிக் கழகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வீடு வாங்க விரும்பிய பகுதியில், பெரும்பாலானவர்கள் இந்துக்கள்தான். சில கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளனர்.
முன்பும் ஒருமுறை இங்கு நான் வீடு வாங்க முயன்றேன். அப்போது அங்கிருந்த சிலர் நான் ஒரு முஸ்லீம் என்பதால் இங்கு வீடு கிடைக்காது என்று கூறினர். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது எனக்கு வீடு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட வீட்டு வசதிக் கழகத்திற்கு சிறுபான்மையினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஆணைய துணைத் தலைவர் ஆப்ரகாம் மத்தாய் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் என்பதால் வீடு தர மறுத்த செயல் மும்பை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.