Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்ணே கலைமானே... காலம் கடந்தும் கலங்கடிக்கும் மூன்றாம் பிறை!
சென்னை: காதல் ..முதலில் பிரமிக்க வைத்து, பின் மாயவலையில் சிக்க வைக்கும் ஒரு பைத்தியக்காரத்தனம் தான் காதல். இப்படிப்பட்ட காதலை கொண்டாட எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும். காதலை அழகாக வருடி தாலாட்டிய திரைப்படம் தான் மூன்றாம் பிறை.
இத்திரைப்படம் வெளியாகி நேற்றோடு 38 ஆண்டு கடந்து விட்டாலும் இந்த படத்தின் மீதான தாக்கம் குறையவில்லை.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
காலத்தால் மறையாத காதல் காவியம் குறித்து சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் இன்று என மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளது.
அகவை 38
இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தி1982ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்திற்கு நேற்றோடு அகவை 38 ஆகிறது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் அவர் அவர் பங்குக்கு சிறப்பாக நடித்து அசத்தி இருப்பார்கள்.
மெல்லிய காதல்
மனமுதிர்ச்சி அடைந்த அப்பாவி இளைஞனுக்கும், குழந்தையாக மாறியிருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பூக்கும் அற்புதமான காதலும், மெல்லிய உறவும், அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இளைஞனின் நிலையை பல வலிகளில் கூறியுள்ளது இப்படம். சீனுவாக கமலும், விஜியாக ஸ்ரீதேவியும் வாழ்த்து காட்டி இருப்பார்கள்.
300நாட்களுக்கு மேல்
திரையரங்கில் கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய காதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, கண்ணதாசனின் பாடல் வரிகளில் இளையராஜாவின் இசை இன்னும் இப்படத்திற்கு மெருகூட்டியது.
ஆல் டைம் பேவரைட்
சில்க் கமல்ஹாசன் நடனமாடிய பொன்மேனி உருகுதே வேற லெவல் டிரெண்டானது. இன்று வரை இந்த பாடலை அடித்துக்கொள்ள வேறு பாடல் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பூங்காற்று புதிரானது, கண்ணே கலைமானே போன்ற பாடல்களில் இசைஞானி இளையராஜா இன்றளவும் வான் அளவு உயர்ந்து நிற்கிறார். இன்னும் பல காதலர்களின் ரிங்டோனாகவும், வாட்ஸ் அப் ஸ்டேடஸ்டாகவும் இந்த பாடல்கள் உலவி வருகின்றன.
2 தேசியவிருதுகள்
கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பாலுமகேந்திராவும் பெற்றனர். மேலும், தென்னிந்திய திரைப்பட விருது, தமிழக அரசின் விருது என பல விருதுகளை வாரிக்குவித்தது.
இந்தியில் இயக்கினார்
இப்படம் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்தது. வசந்த கோகிலா என்ற பெயரில் தெலுங்கில், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கிலும் ஹிட்டடித்தது. மேலும் இந்தியில் பாலுமகேந்திராவே, கமல், ஸ்ரீதேவியை வைத்து சத்மா என்ற தலைப்பில் ஹிந்தியில் இயக்கினார்.
வானில் ஜொலிக்கும்
38 ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் இப்படம் குறித்து, சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 38 ஆண்டுகளுக்கு முன் இன்று என தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளது. காதல் உள்ள வரை காதலர்கள் உள்ள வரை இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த படம் வானில் பிறையாக ஜொலித்துக்கொண்டே இருக்கும்.