Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சபாஷ், இதான் சரியான ரிவார்டு: நாலுபேரை ஜெயிலில் தள்ளிய 'கொலவெறி..'!
இன்னொரு பக்கம், இந்த கொலவெறி பாடலைக் கேட்கும் சாதாரண, நடு வயதுக்காரர்கள் அல்லது இனிமையான சினிமா இசை ரசிகர்கள் 'பிபி' ஏறி வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்ததும் நடந்தது.
இந்த இரண்டாவது சம்பவம்தான் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது. சென்னையில் 'கொலவெறிப்' பாடலைப் பாடி ரயிலில் பயணிகளைத் 'துன்புறுத்திய' நான்கு பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டையில் குடிபோதையில் ரயிலில் ஏறிய இந்த நால்வரும் சமீபத்திய ஹிட் பாடலான 'ஒய் திஸ் கொலவெறி டி..' பாடலை பாடி பெண்களை கேலி செய்துள்ளனர். இதையடுத்து ரயில்வே போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் விவரம்: செங்குன்றத்தைச் சேர்ந்த கணேசன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர், சேஷப்பா, பாபு என விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 பேரும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டு முதல் வகுப்பில் ஏறி கோரஸாக கொலவெறி பாடலைப் பாடியுள்ளனர். அதில் ஒருவர் லுங்கி அணிந்துகொண்டு தனுஷைப் போல நடனமாடி சக பயணிகளை தொந்தரவு செய்ததாக என போலீசார் தெரிவித்தனர்.
மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அந்த ரயில் வந்தபோது கூச்சலைக் கேட்டு ரயில்வே போலீசார் பெட்டிக்குள் ஏறினர். அப்போது அமைதியாகிவிட்டிருந்தனர் இளைஞர்கள். பின்னர் ரயில் புறப்பட்டபோது மீண்டும் பாடத் தொடங்கினர். அப்போது போலீசார் அவர்களைப் பிடித்து கைது செய்தனர். தனுஷின் கொலவெறி பாடலை மகா வெறியோடு பாடி ஆடி தொல்லை கொடுத்த அந்த நால்வரும், தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்!