Don't Miss!
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2015: விவசாயிகள் பிரச்சினையைப் பேசிய 49 ஓ, கத்துக்குட்டி.. கங்கிராட்ஸ்!
இந்த ஆண்டு திரைத்துறையில் இரண்டு கவனிக்கத்தக்க படங்கள் வெளியாகின. இரண்டுமே விவசாயிகளின் பிரச்சினையைப் பேசியவை. வெறும் பிரச்சாரமாக இல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்தப் படங்கள் அமைந்தன.
அவை கவுண்டமணியின் 49 ஓ, இன்னொன்று மீத்தேன் திட்டத்தை தடுக்க உதவிய கத்துக்குட்டி.
49 ஓ
அரசியல்வாதிகள் ஓட்டுக்காக விவசாயிகளை எப்படியெல்லாம் ஏய்க்கிறார்கள் என்பதை நெத்தியடியாகச் சொன்ன படம் 49 ஓ. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை அமைத்திருந்தால், இந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாகவே 49 ஓவைக் கொண்டாடியிருக்கலாம்.
கவுண்டமணி
இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கவுண்டமணிதான். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நடிக்காமல், பிடிவாதமாக பல வாய்ப்புகளை மறுத்துவந்த மனிதர், ஒரு சரியான கதையைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவே களமிறங்கினார். மக்களைக் கவர்ந்தார்.
கத்துக்குட்டி
மீத்தேன் வாயு எடுப்பதற்காக தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளையே மலட்டு மண்ணாக்கும் திட்டத்தை அம்பலப்படுத்த எடுக்கப்பட்ட படம். கலகலப்பான காட்சிகள், பார்ப்பவர்களுக்கு மீத்தேன் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியான வசனங்கள் என மனம் கவர்ந்தார் புதிய இயக்குநர் இரா சரவணன்.
இந்த மாதிரிப் படங்கள்தான் இன்றைய தேவை
கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் அழித்து வரும் இந்த சூழலில், விவசாயத்தின் முக்கியத்துவம், எதிர்காலத்தில் எந்த மாதிரி ஆபத்தைச் சந்திக்கப் போகிறோம் என்பதை உணர்த்தக் கூடிய படங்கள்தான் இப்போதைய தேவை.
புதியவர்கள்
பொழுதுபோக்கோடு, சமூகப் பொறுப்பையும் உணர்த்தும் 49 ஓ, கத்துக்குட்டி ஆகிய படங்களைத் தந்தவர்கள் மூத்த இயக்குநர்கள் அல்ல... இளைஞர்கள். முதல் பட இயக்குநர்கள். சினிமாவில் ஜெயித்தவர்கள், அந்த சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டும் பார்க்கும் சூழலில், தங்கள் முதல் படங்களிலேயே சவாலான விஷயங்களை, பொறுப்புணர்வுடன் முன்வைத்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!