Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இறந்து கிடந்த நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் 50 பவுன் நகைகள் மாயம்: சகோதரர்
சென்னை: நடிகை ஜெயஸ்ரீயின் வீட்டில் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மாயமாகியுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ள ஜெயஸ்ரீ(49) சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் பிணமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் படுக்கையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். தரையில் ஆணுறை கிடந்தது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் ஜெயஸ்ரீ தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சேலம் மாநகராட்சியில் வேலை செய்யும் அவரின் சகோதரர் செல்வராஜ் போலீசாரிடம் கூறியிருப்பதாவது,
ஜெயஸ்ரீயின் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அவர் அணிந்திருந்த கவரிங் நகைகள் அப்படியே உள்ளன என்றார்.