Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பணம் தரியா, லீக் பண்ணவா: பாகுபலி 2 இணை தயாரிப்பாளரை மிரட்டிய 6 பேர் கைது
ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பின் இணை தயாரிப்பாளரான கரண் ஜோஹாரை மிரட்டிய வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் இந்தி பதிப்பின் இணை தயாரிப்பாளர் கரண் ஜோஹாரை 6 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இது குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எங்களிடம் தரமான பிரிண்ட் உள்ள பைரேட்டட் காபி உள்ளது. நாங்கள் கேட்கும் பணம் தராவிட்டால் அதை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று ராகுல் மேத்தா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி பாகுபலி 2 கரண் ஜோஹார் மற்றும் தயாரிப்பாளர்களை மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பீகாரில் உள்ள தியேட்டர் உரிமையாளர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 11ம் தேதி ஹைதராபாத்தின் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் மேத்தா கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த தகவலின்பேரில் டெல்லியில் வைத்து ஜிதேந்திர மேத்தா, தவ்பிக், முகமது அலி மற்றும் பீகாரில் திவாகர் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.