Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிம்புதேவனின் ராசியான எண் 6 போலும்
Recommended Video
சென்னை: இம்சை அரசன் 23-ம் புலிகேசி மூலம் ஈர்த்த இயக்குனர் சிம்புதேவன், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை இயக்கியிருந்தார்.
3 வருட இடைவெளிக்கு பிறகு அவர் இம்சை அரசன் படத்தின் 2-ம் பாகமான 24-ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது.
இதனால் துவண்டு போகாத சிம்புதேவன், வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் அடுத்த படத்தை எடுத்து முடித்துள்ளார். கசடதபற என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் , தலைப்பு உட்பட அனைத்தும் 6 ஆக அமைந்துள்ளது.
படத்தின் கதையில் 6 பாகங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனி இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என புதுவிதமாக இயக்கியுள்ளார் சிம்புதேவன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
அதில் இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இசை அமைப்பாளர்களாக யுவன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் மற்றும் சாம் சி.எஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
முதன்முறையாக கர்ப்பம் பற்றி பேசிய எமி ஜாக்சன்... என்னா பூரிப்பு பாருங்க!
பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் என 6 ஒளிப்பதிவாளர்கள், ராஜா முஹமது, ஆண்டனி, காசி விஸ்வநாதன், விவேக் ஹர்சன், ரூபன் மற்றும் ப்ரவீன் கே.எல் என 6 பிரபல எடிட்டர்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
ஒரே படத்தில் இத்தனை தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு இவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்தது ஆச்சரியான விஷயமாக அமைந்துள்ளது. திரையில் பார்க்கும்போது நிச்சயம் நமக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.
எல்லாமே 6 ஆக இருப்பது முக்கியமல்ல.. படம் 100 நாள் ஓடணும்.. அதையும் மனசில் வச்சுக்கங்க பாஸ்களா!